கடந்த இரண்டு ஆண்டுகளில், லியாங் மிங், ஓவியம் வரைவதில் புதிய முறையை ஆராய்ந்து, ஓவிய துறையில் பிரபலமாகி விட்டார்.
"கற்பனையான து லோவ்" என்பது, லியாங் மிங்கை அடையாளப்படுத்தும் இன்னொரு ஓவியப் படைப்பாகும். இந்த ஓவியத்தில் மஞ்சள் வண்ண இலைகளை கொண்ட மரங்களின் நிழல், நீர் குட்டையில் பிரதிபலிக்கின்றது. து லோவ் குடியிருப்பு, சில சமயங்களில் உண்மையான காட்சி, சில சமயங்களில் கற்பனையான காட்சி போல் காணப்படுகின்றது.
"இந்த ஓவியத்தில், எனது மனதிலுள்ள து லோவ் , கனவிலுள்ள து வோவ், உயிர்த்துடிப்பான து லோவ் ஆகியவற்றை வரைந்தேன்" என்றார் அவர்.