லியாங் மிங்கின் து லோவ் ஓவியப் படைப்புகள் அதிகமாக இருக்கின்றன. சில படைப்புகள், து லோவ் குடியிருப்புக்களின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. சில படைப்புகள், து லோவ் குடியிருப்பில் வாழும் குடும்பங்களின் நாட்டுப்புறப் பண்பாடுகளை வரைந்து காட்டுகின்றன. சில படைப்புகள், நான்கு பருவக்காலத்தில் து லோவ் குடியிருப்பின் தோற்றம் மாறுபடுவதை காட்டுகின்றன. வேறு படைப்புகள், து லோவில் வாழும் மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், லியாங் மிங் "பொன்னிறத் தாயகம்" என்னும் ஓவியப் படைப்பை வரைந்தார். 5 திங்கள் காலமாக வரைந்து முடிந்த இந்த ஓவியத்தின் நீளம், 8.2 மீட்டரும், அகலம் 2.8 மீட்டரும் ஆகும். இது உலகில் மிக பெரிய து லோவ் ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னிற இலையுதிர்காலத்தில ஃப்சியான் மாநிலத்தின் யோங் திங் பிரதேசத்திலுள்ள Chu Xi என்னும் இடத்தில் து லோவ் குடியிருப்பு வளாகத்தை இந்த ஓவியம் காட்டுகின்றது. சமையல் புகை, தெளிவான நதி, படிமுறை வயல், சிவப்பு சீமை பனிச்சை பழம், அருவி உள்ளிட்ட அழகான காட்சிகள், இந்த ஓவியத்தில் காணப்படுகின்றன. அவரது கலை கற்பனையாற்றலை இந்த ஓவியம் மூலம் உணரலாம்.