• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெண்கல முரசு பண்பாடு
  2014-07-11 16:26:43  cri எழுத்தின் அளவு:  A A A   

வெண்கல முரசு, பண்டைக்காலத்தில் சீனாவின் தென் பகுதியிலுள்ள சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்திலும், தென் கிழக்காசியப் பிரதேசத்திலும் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த தொல் பொருளாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சிப் போக்கில், வெண்கல முரசு, உள்ளூர் பிரதேசத்திலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடையதாக விளங்கியுள்ளது. அதனால் தனிச்சிறப்பு வாய்ந்த வெண்கல முரசுப் பண்பாடு உருவானது.

குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய அருங்காட்சியகத்தின் வெண்கல முரசு காட்சி அரங்கில், இந்த அரங்காட்சியகத்தின் சமூகக் கல்விப் பிரிவின் துணைத் தலைவர் Zhao Yuan Yuan அம்மையார் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். "இந்த வெண்கல முரசு கி.பி.முதலாம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டது. வெண்கல முரசின் மேற்பரப்பில் இறகுகளோடு நடனநாடும் மனிதன், பலியிடுதல், மீன்பிடித்தல் உள்ளிட்ட பல உருவங்கள் காணப்படுகின்றன. அக்காலம், வெண்கல முரசின் வளர்ச்சி பக்குவமடைந்திருந்த காலமாகும். இக்காலத்தில் வெண்கல முரசு அழகாக அலங்கரிக்கப்பட்டது" என்று Zhao Yuan Yuan அம்மையார் தெரிவித்தார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040