• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெண்கல முரசு பண்பாடு
  2014-07-11 16:26:43  cri எழுத்தின் அளவு:  A A A   

60 வயதான Chen yao Ling என்பவர், குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் துங் லென் மாவட்டத்தில் வாழ்கிறார். அவர் உள்ளூர் பிரதேசத்தில் முரசு மன்னர் என போற்றப்படுகிறார். அவர் நூற்றுக்கு மேலான வெண்கல முரசுகளைச் சேகரித்துள்ளார். தற்போது சீனாவில் மிக அதிகமான வெண்கல முரசுகளை சேகரித்திருக்கும் நபர் அவராவார். Chen Yao Lingகின் கருத்தில், ஒவ்வொரு வெண்கல முரசுக்கும் ஒரு கதை உள்ளது. ஒவ்வொரு வெண்கல முரசும், ஒரு தேசிய இனத்தின் வரலாறு ஆகும்.

வெண்கல முரசை மையமாக கொண்டு, குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் துங் லன் மாவட்ட அரசு பன்னாட்டு வெண்கல முரசு பண்பாட்டுச் சுற்றுலா விழாவை நடத்தியது. இவ்வாறு வெண்கல முரசுப் பண்பாட்டை வெளிக்கொணர்ந்து பரவல் செய்வதன் மூலம், பண்பாட்டுச் சுற்றுலா தொழிலின் வளர்ச்சியை அது விரைவுபடுத்தியுள்ளது. He Chi நகரின் துணை நகராட்சித் தலைவர் லீ லீ அம்மையார் பேசுகையில், வெண்கல முரசுப் பண்பாடு மூலம் வரலாற்றைக் கையேற்றி, சீனாவிலும், தென் கிழக்காசியாவிலும் நாடு கடந்த பண்பாட்டு மண்டலத்தையும், பன்னாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேடையையும் உருவாக்கி, இரு தரப்பின் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை தூண்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040