• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெண்கல முரசு பண்பாடு
  2014-07-11 16:26:43  cri எழுத்தின் அளவு:  A A A   

இது தொடர்பாக நிபுணர்கள் செய்த ஆய்வின்படி, தென் கிழக்காசியப் பிரதேசத்தில், ஆதிகாலச் சமூகத்தின் பிந்தைய காலத்தில் வெண்கல முரசுகள் தோன்றின. இவ்வெண்கல முரசு மேற்பரப்பிலுள்ள சூரியன் உருவம், பறவை உருவம், இறகுகளோடு நடனமாடும் மனித உருவம் உள்ளிட்ட உருவங்கள், சீனாவின் தென் பகுதியிலுள்ள வெண்கல முரசுகளின் மேற்பரப்பிலுள்ள உருவங்களுடன் ஒத்திருந்தன. புதிய கற்காலத்தில், சீனாவுக்கும் தென் கிழக்காசியாவுக்குமிடையே தேசிய இனப் பரிமாற்றம் நடைபெற்று வந்ததை இது காட்டுகிறது.

வெவ்வேறான காலத்தில், வெண்கல முரசின் பங்குகளும் செயல்திறன்களும் வேறுபட்டவையாக இருந்தது என்று Zhao Yuan Yuan அம்மையார் தெரிவித்தார். சில காலங்களில், வெண்கல முரசு, பலியிடும் போதைய இசைக் கருவியாகவும், அதிகாரத்தின் சின்னமாகவும் இருந்தது. சில காலங்களில், வெண்கல முரசு, செல்வத்தின் சின்னமாக இருந்தது. திருமண விழாவிலும், முக்கிய விழாக்களிலும் வெண்கல முரசு பொழுதுபோக்கு பங்காற்றியது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040