தற்போது, வெண்கல முரசுப் பண்பாடு, அரங்குகளில் மேலதிகமாக தோன்றியுள்ளது. பன்னாட்டு நாட்டுப்புறப் பாடல் விழாவிலும், பெரிய ரக தென் கிழக்காசிய நடையுடை பாவனைகள் கொண்டுள்ள இசை நாடகம் உள்ளிட்ட அரங்கேற்றங்களிலும் வெண்கல முரசுகள் காணப்படுகின்றன.
வெண்கல முரசுப் பண்பாடு, சீனாவும், தென் கிழக்காசிய நாடுகளும் நீண்டக்காலப் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக்களால் உருவாக்கப்பட்ட பொதுச் செல்வமாகும் என்று குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இன ஆய்வகத்தின் தலைவர் Zhao Ming Long தெரிவித்தார். பண்டைக்காலத்தில் கடல் வழி பட்டுப் பாதையின் வளர்ச்சியை நேரில் கண்டுள்ள வெண்கல முரசுப் பண்பாடு, 21வது நூற்றாண்டின் கடல் வழி பட்டுப்பாதை ஆக்கப்பணியில் கையேற்றப்பட்டு, வளர்ச்சியடையும் என்று Zhao Ming Long தெரிவித்தார்.