மேலும், இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்களின் கல்லறை கல், கிறிஸ்தவர்களின் மதச் சின்னம்(கிறிஸ்தவ சிலுவை), இந்து மதக் கடவுள் விஷ்னுவின் சிலை உள்ளிட்டவை, கடல் போக்குவரத்து அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன. காட்சிக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் கதை உண்டு. காட்சிப் பொருட்களைப் பார்வையிட்ட லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் ரோலன்ஸ் கூறியதாவது—
"ஓர் அருங்காட்சியகத்தில் இவ்வளவு அதிகமான காட்சிப் பொருட்களைப் பார்வையிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இவை பற்றி ஆய்வு செய்து, தொடர்புடைய பண்பாடு, கலை மற்றும் கதைகள் பற்றி அறிந்து கொள்வது ஈர்ப்பாற்றல் கொண்ட விஷயம். அடிக்கடி போய் வரும் கப்பல்கள், விறுவிறுப்பான வர்த்தகம் ஆகியவை வியப்பு தரும் உண்மைகள். அப்போதைய வரலாறு பற்றி அறிந்து கொள்ள எனக்கு பேரார்வம் உண்டு" என்று அவர் கூறினார்.