2012ஆம் ஆண்டு திபெத்தின் வரி வசூலிப்புத் தொகை பெரிதும் அதிகரித்து, ஆயிரத்து 535 கோடியே 59 இலட்சத்து 50 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. ஆண்டு அதிகரிப்பு விகிதம் 58.9 விழுக்காடாகும். அண்மையில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு வரி பணியகத்திலிருந்து கிடைத்த செய்தி இவ்வாறு கூறியது.
கடந்த சில ஆண்டுகளாக, திபெத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சியுடன் அதன் வரி வசூலிப்புத் தொகையும் விரைவாக அதிகரித்து வருகின்றது. 2006ஆம் ஆண்டு முதல் இது ஆண்டுக்கு சராசரியாக 37.4 விழுக்காடு என்ற வேகத்துடன் அதிகரித்து வருகிறது. திபெத்தின் பொரவளாதார வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் இது மாபெரும் பங்காற்றியுள்ளது.
தவிர 11வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் அதாவது 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை, திபெத்தில் தனியார் தொழில் நிறுவனங்கள் வழங்கிய வரித்தொகை முதன்முதலாக அரசுச் சார் தொழில் நிறுவனங்களைத் தாண்டத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.