• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் வாழும் இராட்சத பாண்டாக்கள்
  2013-01-24 10:22:00  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில், சீனாவில் வாழும் இராட்சத பாண்டாக்களின் எண்ணிக்கை மகிழ்ச்சியூட்டும் அளிவில்அதிகரிப்புயடைந்துள்ளது. இவ்வாண்டு, உலக மிகப் பெரிய ராட்சத பாண்டாக்களின் பாதுகாப்பு தளமான சீனாவின் Chengdu பாண்டா வளர்ப்பு தளத்தில், 7 பாண்டாக்கரடிகள் பிறந்தன.

ராட்சத பாண்டா பாதுகாப்பாளர் என்ற தலைப்பிலான போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்கர் Melissa Katz, Chengdu நகரில் பாண்டா பிறப்புக் கவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தக் கரடிகள் நலமாக உள்ளன. அவை கூட்டாகப் படம் பிடிக்கப்பட்டன.

தவிர, Chengdu பாண்டா வளர்ப்புத் தளத்தைச் சேர்ந்த ராட்சத பாண்டா ஒன்று, ஜப்பானில் 8வது குட்டி பாண்டாவைப் பெற்றெடுத்தது. அவை முறையே Aoliao,Xiaoqiao,Siyi,Yuanrun,Miaomiao,Youbing என்படும்,இரட்டைகுட்டி பாண்டாக்களின் பெயர் Chengshuang மற்றும் Chengdui என்பதுமாகும்.

Aoliao என்னும் கரடி, இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய நாள் முதன்முதலாகப் பிறந்தது. பிறந்த போது, அதன் எடை 0.5 பண்வுட் மட்டும் இருந்தது. ஆனால், இப்போது அது 13 பண்வுட் எடை பெற்றுள்ளது. பொதுவாக, ராட்சத பாண்டா 353 பண்வுட் எடையை எட்டக் கூடும்.

தற்போது, உலகளவில், சுமார் 1600 ராட்சத பாண்டாக்கள் மட்டுமே வாழ்கின்றன. பாண்டா கரடி விலங்கிமை அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்கு வகைகளில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராட்சத பாண்டாவின் குழந்தை காலம், மிகவும் முக்கியமானது. அவை தாய் பாண்டாவுடன் இணைந்து வாழ வேண்டும். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், அவற்றுக்கு இயற்கையான வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பின்னார், அவை இயற்கையான வனவாழ்வு வாழத் தொடங்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040