• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கதை:இளவரசி ஆன்போ
  2013-02-01 16:48:48  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷின்ச்சின் வட்டத்தில் கோழிக்கொண்டை மலையின் அடிவாரத்தில் ஆன்போதங் என்ற வெப்ப நீரூற்று இருக்கிறது. இந்த வெப்ப நீருற்று எல்லா பருவகாலத்திலும் சூடான நீரை தரக்கூடியது. இந்த நீர் வாதம், தோல் நோய் ஆகியவற்றுக்கு அருமருந்தாக அமைவதாகக் கூறுவர். நீருற்றின் வாயில் இருக்கும் நீர் ஒரு முட்டையை போட்டால் சீக்கிரத்தில் அவிந்துபோகும் அளவுக்கு சூடானது.

நீண்ட நெடுங்காலத்துக்கு முன், இங்கே எந்த நீருற்றும் இல்லை. ஆனால் கோழிக்கொண்டை மலையின் தென்பகுதிவரை நீண்ட கடல்தான் இருந்தது. அந்தக்கடலின் ஆழமான இடத்தில் டிராகன் மன்னனின் மாளிகை இருந்தது. அதில் வசித்த டிராகன் மன்னனுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று இருந்தது. நாள் முழுதும் தன் கைகளில் ஏந்தியபடி செல்ல மகளை கொஞ்சிக்கொண்டிருக்கும் அளவுக்கு மன்னனுக்கு மகள் மீது பாசம். மனிதர்கள் தங்கள் குழந்தைக்கு தரும் தாய்ப்பாலை தன் குழந்தையும் குடித்தால், அவள் நூறு மடங்கு வனப்பு பெருகி, பேரழிகியாக வளர்வாள் என்று யாரோ கூறக்கேட்ட டிராகன் மன்னன் ஒருநாள் மனிதர்கள் வாழும் மண்ணுலகுக்கு வந்தான்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040