• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இரு கூட்டங்கள் பற்றிய வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் பாராட்டு
  2013-03-05 19:06:32  cri எழுத்தின் அளவு:  A A A   

12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் 5ம் நாள் துவங்கியது. இவ்வாண்டு சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடரும் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதையும், பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியையும் முன்னேற்றும். சீனாவின் வளர்ச்சிக்கு இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகில் செல்வாக்கை ஏற்படுத்தும் என்று சீனாவின் இரு பெரும் கூட்டத்தொடர்கள் நடைபெறும் இக்காலத்தில் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சீனாவின் இரு பெரும் கூட்டத்தொடர்கள், துவங்கியுள்ளன. இக்காலத்தில் சீன பொருளாதார மற்றும் சமூக மாதிரிகள் மாறுகின்றன. சீனாவின் புதிய அரசு, அடுத்த பத்தாண்டுகளில் சீனாவின் வளர்ச்சியால் ஏற்படும் செல்வாக்கி உலகம் உயர்வாக கவனம் செலுத்துகின்றது என்று சிங்கப்பூரின் லியன் ஹெ சாவ் பாவ் செய்தியேடு கூறியது.

வருமான இடைவெளியை குறைப்பது சீனாவின் புதிய தலைவர்களின் முதல் கடமையாகும். வருமான வினியோக அமைப்பு முறை, ஊழல், சுற்றுச்சூழல் ஆகிய பிரச்சினைகள் கவனத்தை ஈர்க்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டு மிக சிக்கனமாக நடைபெறுகின்ற இரு கூட்டத்தொடர்களை வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் பாராட்டியுள்ளன. வரவேற்பு விழா, விடுதி அறை மலர்கள், விலை உயர்ந்த உணவு, சிறந்த அன்பளிப்பு பொருட்கள், பண்பாட்டு நிகழ்ச்சிகளை இந்த இரு கூட்டத்தொடர்களில் காண முடியவில்லை என்று பிரன்சா லட்டினா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040