47 வயதான ஹு சின் மின் சிறு வயதிலிருந்தே பெற்றோரிடமிருந்து களிமண் சிற்பக் கலையைக் கற்றுக் கொள்ளத் துவங்கினார். தற்போது அவர் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசாகவும், முதல் நிலை கைவினைக் கலைஞராகவும் இருக்கின்றார். 2002ஆம் ஆண்டு அவரும், லியு யிங் கிராமத்தின் இன்னொரு மூத்த கலைஞர் ஹு ஷென்னும் ஒத்துழைத்து தயாரித்த களிமண் குதிரை, தேசிய அஞ்சல் தலைமை பணியகத்தின் தபால் தலை வரைவு பிரிவால், ஆண்டுகளை குறிக்கும் 12 விலங்குகளில் ஒன்றான விலங்கான குதிரை தபால் தலையின் உருவமாக உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது ஃபெங் சியாங் களிமண் சிற்பங்கள், சீனாவின் புகழ்பெற்ற நாட்டுப்புற கைவினைப் பொருட்களாகவும், தனிச்சிறப்பு வாய்ந்த அன்பளிப்புப் பொருட்களாகவும் மாறியுள்ளன. இப்பொருட்கள் சீன மக்களின் விருப்பத்தை பெற்றுள்ள அதே வேளையில், வெளிநாடுகளிலும் அதிகமாக விற்கப்பட்டுள்ளன. சீனர்களும், வெளிநாட்டவர்களும் இந்த கைவினைப் பொருட்களை பெரிதும் பாராட்டுகின்றனர்.