பிரிக்ஸ் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தொழிற்துறை மற்றும் வணிக துறையினருக்கும் காலையுணவின் போது நடைபெற்ற கூட்டம் மார்ச் 27ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
பிரிக்ஸ் நாடுகளின் அரசுகளுக்கிடையே ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தைக் கூட்டாகத் தூண்ட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் உரை நிகழ்த்திய போது கூறினார். பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்துறை மற்றும் வணிக செயற் குழு நிறுவப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்காவின் அரசுத் தலைவர் ஜேகப் ஜுமா கூட்டத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து, தொழிற்துறை மற்றும் வணிகத் துறையின் பிரதிநிதி பேசுகையில், அடிப்படை வசதிகளின் கட்டுமானம், சுங்கத் துறை, வேளாண் துறை, நிதித் துறை, எரியாற்றல் முதலிய துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளைப் பிரிக்ஸ் நாடுகள் வலு ப்படுத்த வேண்டும் என்றார்.