38 வயதான zhao wei, சீனாவின் ஷான்சி மாநிலத்தின் விவசாயியாக இருந்தார். 16 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் வாழ் சீன வர்த்தகர் ஒருவர், நிறுவனம் ஒன்றின் பங்குதாராகச் சேர்ப்பதற்காக, zhao weiயை அழைத்தார். பிறகு, அந்த வர்த்தகர் zhao wei யிடமிருந்து மூன்று லட்சம் renminbi யுவானை ஏமாற்றி, தப்பிச் சென்றார்.
அந்த வர்த்தகரைத் தேடி, பணத்தைத் திரும்பி கொடுக்கச் செய்யும் வகையில், சீனாவிலிருந்து zhao wei அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது, ஆங்கில மொழியை சிறிதளவு கூட புரியாத zhao wei, முழு முயற்சியுடன் போராடி, இறுதியில், அமெரிக்காவில் கடனைத் தேட மக்களுக்கு உதவி செய்யும் ஒரு தனியார் துப்பறிவாளராக மாறினார்.
2012ஆம் ஆண்டின் இறுதியில், கனடாவில் சீன-கனடிய திரைப்பட நாடகப் போட்டி நடைபெற்றது. zhaoweiயின் கதையின்படி எழுதப்பட்ட நாடகம், அப்போட்டியில் மூன்றாம் இடத்தை வகித்தது. இறுதியில், அமெரிக்கா, கனடா, சீனா ஆகிய மூன்று தரப்புகளும் இணைந்து, சீன விவசாயி zhao wei, தனியாக அமெரிக்காவில் உழைத்து போராடிய கடன் வாங்கியவர்களைத் திரைப்படமாக உருவாக்கும் என்பது தெரிய வருகிறது..