தோல் பூத்தையல், பல்வகை தோல்களில் தையல் வேலைப்பாடுகளை செய்யும் நாட்டுப்புற கைவினைக் கலையாகும். சின்காய் மாநிலத்தின் தலைநகர் சி நிங்கிற்கு மேற்கில் உள்ள குவாங் யுவன் மாவட்டத்தின் டன்கர் தோல் பூத்தையல் பொருட்கள் கலையழகு மிகுந்தவை. இப்பொருட்களில் தனிச்சிறப்பு மிக்க கலை பாணியும், செழிப்பான பண்பாட்டு அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. டன்கர் தோல் பூத்தையல், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறுடையது.
குவாங் யுவன் மாவட்டம், பண்டைக்காலத்தில் டன்கர் என அழைக்கப்பட்டது. இது சியாங் இன மக்கள் வாழ்ந்த இடமாகும். பட்டு பாதை, டாங் வம்சத்தின் தலைநகர் சாங் அன்னிலிருந்து திபெத்தின் லாசாவுக்குச் செல்லும் பழமைவாய்ந்த பாதை ஆகியவற்றில் இந்நகர் முக்கிய இடமாகும். அது மட்டுமல்ல, வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இங்கே இணைந்திருந்தன. டாங் வம்சத்தின் சிறந்த ஆட்சிக்காலத்தில், தேயிலை-குதிரை சந்தை டன்கர் நகரில் உருவாக்கப்பட்டது. மிங் மற்றும் சிங் வம்சங்களின்போது, டன்கர் நகர், சீன மேற்கு பகுதியின் பல்வேறு தேசிய இனத்தவர்கள் வர்த்தக நடவடிக்கையிலும் பண்பாட்டுப் பரிமாற்றத்திலும் ஈடுபட்ட முக்கிய இடமாகியது. சிங் வம்சத்தின் இறுதியில், டன்கர் நகர் புகழ்பெற்ற வர்த்தக வினியோக இடமாக மாறியது. பல்வேறு இடங்களிலிருந்து வணிகர்களும், கைவினை கலைஞர்களும் இவ்விடத்துக்கு ஏற்றி கொண்டு வரப்பட்டன. ஆடு மாடுகள், மயிர், தோல் உள்ளிட்ட பல்வகை சரக்குகள் இங்கிருந்து ஏற்றிச்செல்லப்பட்டன. அதனால் அதன் பொருளாதாரம் மிகவும் செழுமையாக இருந்தது. இந்நகர் "சிறிய பெய்சிங்" என புகழ்ந்து பாராட்டப்பட்டது.