வரலாறு உள்பட பல காரணங்களால், டன்கர் தோல் பூத்தையல் கலை, அழிவின் விளிம்பில் இருக்கிறது. இக்கலையை அறிந்திருப்போர் மிகவும் குறைவு. டன்கர் தோல் பூத்தையல் கலையைப் பாதுகாத்து, கையேற்றி, வளர்ப்பது ஆக்கப்பூர்வ செல்வாக்கு வாய்ந்தது.
கடந்த சில ஆண்டுகளில், குவான் யுன் மாவட்ட அரசு, டன்கர் தோல் பூத்தையல் கலையை, குவான் யுவன் பண்பாட்டுச் சின்னமாக உருவாக்குவதை முக்கிய அம்சமாக கொண்டு, டன்கர் தோல் பூத்தையல் கலை ஆய்வு மையத்தை நிறுவியது என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குவாங் யுவன் மாவட்டக் குழுவின் நிரந்தர உறுப்பினரும், இம்மாவட்டப் பிரசார துறை தலைவருமான குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ கோ ச்சுவான் தெரிவித்தார். தவிர, தோல் பூத்தையல் படைப்பு மாதிரிகளையும், அது தொடர்பான ஆவணத் தகவல்களையும் கண்டறிந்து திரட்டுமாறு உள்ளூர் அரசு ஏற்பாடு செய்து தொடர்புடைய பண்பாட்டு பிரமுகர்களுக்கு உதவியுள்ளது. இந்த அரியக் கலையின் தோற்றுவாய், வளர்ச்சி, பரவல் மற்றும் பாதுகாப்பு நிகழ்வு நிலை பற்றி பூர்வாங்க ரீதியில் முன் முயற்சி எடுத்து அறிய வந்துள்ளது. ஒரு தொகுதி நாட்டுப்புறக் கலைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய தோல் பூத்தையல் கலை பாதுகாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, தலைசிறந்த தோல் பூத்தையல் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.