குவான் யுவன் மாவட்டத்தின் பண்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் சாங் யுன் ஃபியின் அறிமுகத்தின்படி, குவாங் யுவன், வேளாண் பிரதேசமும், கால்நடை வளர்ப்பு பிரதேசமும் இணைகின்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கே தோல் வகைகள் அதிகமாக இருந்ததால், தோல் பதனீட்டுத் தொழில் விரைவாக வளர்ச்சியடைந்தது. சிறந்த தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தோல் பதனிடுவோர் அங்கு தோன்ற தொங்கினர். இது, டன்கர் தோல் பூத்தையல் தோன்றுவதற்கு தூண்டுதல் வழங்கியது.
இது வர்த்தகத்தின் செழுமைமையும், பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் பரவலையும் விரைவுப்படுத்தியுள்ளது. கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், பல்வேறு தேசிய இனங்கள் இங்கே குழுமி வாழ்ந்தன. பல்வகை பண்பாடுகள் இங்கே ஒன்றிணைந்தன. உள்ளூர் மக்கள் ஆன்மீக வாழ்க்கை மீது கொண்ட ஆசை அதிகரித்து வந்தது. பல்வகை தோல் படங்கள், அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் மிக நல்ல பொருட்களாக மாறின. பொருளாதாரத்தை செழிப்பாக்கி, பண்பாடுகளை ஒன்றிணைக்கும் வளர்ச்சிப் போக்கில், அரிய கலைச் செல்வமான டன்கர் தோல் பூத்தையல் தோன்றியது.