• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:பழமைவாய்ந்த டன்கர் தோல் பூத்தையல் கலை
  2013-04-16 09:49:42  cri எழுத்தின் அளவு:  A A A   

டன்கர் தோல் பூத்தையல் பொருட்கள், பல்வகை பண்பாடுகளை ஒன்றிணைக்கும் தலைசிறந்த கலைப்பொருட்களாகும். மயிர் இழை, தோல் கயிறு, குதிரை முடி, பட்டு, பருத்தி முதலிய வண்ணிமயமான நூல்கள் பூத்தையலில் பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறான கருப்பொருட்கள் மற்றும் இழைகளின் நயத்துக்குக் கிணங்க, வெவ்வேறான பூத்தையல் வழிமுறை பயன்படுத்தப்படுகின்றது. பல்வேறு அழகான வேலைப்பாடுகள் தைக்கப்படுகின்றன.

யாங் ஃபென் யுன் என்பவர், பண்பாட்டு மையத்தின் தொழில் நுட்ப வழிகாட்டி ஆவார். அவரது அறிமுகத்தின்படி, தோல் பூத்தையல் பொருட்களின் வகைகள் செழிப்பானவை. மதிப்புள்ள கலைப் பொருட்களும், அழகான அன்றாட வாழ்க்கை பொருட்களும் அவற்றில் உள்ளன. இயற்கைக் காட்சிகள், மலர்கள், பறவைகள், மிருகங்கள், மனிதர் உருவப்படங்கள் உள்ளிட்டவை பூத்தையல் படைப்புகளில் காணப்படுகின்றன. அது மட்டுமல்ல, புகழ்பெற்ற செழிவழி கதைகள், புராணக் கதைகள், நடையுடை மாதிரிகள் முதலிய அம்சங்களை வெளிப்படுத்தும் உருவங்கள், சொந்த ஊர் மீதான உள்ளூர் மக்களின் அன்பையும், அருமையான வாழ்க்கை மீதான அவர்களின் எதிர்ப்பார்பையும் வெளிப்படுத்தியுள்ளன.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040