• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லீ இனத்தின் வண்ணச்சாயம் பூசும் திறன்
  2013-05-07 08:48:52  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ இனத்தின் பாரம்பரிய துணி நெசவு செய்முறையில், சாயம் பூசும் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தவில்லை. மக்கள் தேவைக்கிணங்க, சாயம் பூசுகின்றனர். லீ இன மக்கள் வாழும் பிரதேசத்தில், சிறப்புத் தொழில் வண்ணச் சாயப் பட்டறையோ, சிறப்புத் தொழில் சாயத் தொழிலாளியோ தோன்றவில்லை. அதனால் ஆசிரியர்-தொழில் பழகுநர் என்ற மாதிரி தொழில் கையேற்றல் உருவாகவில்லை. லீ இன வண்ணச் சாயத் தொழில் திறனி்ன் கையேற்றலில், தாய்-மகள் கையேற்றல் மாதிரி முக்கிய இடம் வகித்தது. தாய் மீண்டும் மீண்டும் கற்றுக்கொடுக்க, மகள் அத்தொழில் திறனில் மிகவும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.

லீ இனம் பயன்படுத்தும் சாயப் பொருட்களில், தாவர சாயப் பொருட்கள் மிகவும் அதிகம். அவுரிச்செடியைத் தவிர, இதர தாவர சாயப் பொருட்கள், பயிரிடப்படாதவை. தாவரத்தின் வேர், நடுத்தண்டு, நடுப்பகுதி, பட்டை, இலை, மலர், பழம் ஆகிய பகுதிகள், சாயப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டன. சில சாயப் பொருட்களை, அதற்கே உரித்தான பதனீட்டு செய்முறைக்கு பிறகுதான், பயன்படுத்தலாம். லீ இன மகளிர் துணிப் பின்னும்போது, குறிப்பிட்ட வண்ண சாயம் தோய்க்க வேண்டுமானால், மலையிலிருந்து குறிப்பிட்ட தாவரத்தின் மலரைப் பறிக்கின்றனர். அந்த மலரை முறைவழிப்படுத்தி, பஞ்சு நூலில் பூசுவர். அவர்கள் அந்த இயற்கை வண்ணத்தைப் பயன்படுத்தும்போது, நூலை அந்த வண்ணச் சாயத்தில் மூழ்க வைப்பர். இது துணிகளுக்கு வண்ணச்சாயம் மிகவும் பழமை வாய்ந்த பூசும் வழிமுறையாகும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040