அவுரிச்செடி, சீனாவில் மிக முன்னதாகவே பயன்படுத்தப்பட்ட தாவர சாயப் பொருளாகும். அவுரிச்செடியை பயன்படுத்தி வண்ணம் தீட்டப்பட்ட துணி, நீல வண்ணமாக மாறுகிறது. அதே வண்ணத்தில் பல முறை தோய்த்து எடுத்தால், அத்துணி, கரு நீலமாக காணப்படுகிறது. அந்த வண்ணம் எளிதில் மங்கி போவதில்லை.
லீ இனம் வாழும் பிரதேசத்தில், அவுரிச்செடியைப் பயிரிடும் பழக்கம் பரவி வந்துள்ளது. இக்காலத்திலும், சில குடும்பங்களின் தோட்டங்களில், அவுரிச்செடி பயிரிடப்படுகிறது. லீ இனம் வாழும் பிரதேசத்தில் காலநிலை மிதமாக இருக்கிறது. மழை அதிகமாக பெய்கிறது. இது, அவுரிச்செடியை வளர்க்கச் சாதகமாக அமைகிறது.
தாவரச் சாயப் பொருட்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களாகும். இப்பொருட்களின் வகைகள் அதிகம். அப்பொருட்களின் பதனீட்டு செய்முறை எளிதாக இருக்கிறது. இந்த சாயப் பொருட்கள், வண்ணம் பூசும் கைவினை நுட்பத்திற்கு மிகவும் பொருந்தியதாக இருக்கின்றன. கையால் வண்ணம் பூசப்படும் லீ இனத் துணி, கலைப் பொருட்களாக உள்ளன.