சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் காயி கிராமத்தில், உய்கூர் இன முதியவர் ஒருவர், பாரம்பரிய உய்கூர் இனத் தொப்பியை அணிந்து, அய்யிதி யிமிங் என்பவரின் வீட்டில் அமர்ந்திருந்தார். திடீரென, இசை ஒலித்தது. உடனடியாக எழுந்த அந்த முதியவர், ஆடிப் பாடத் துவங்கினார். இசையின் தாளத்திற்கேற்ப, அவர் திறமையாக ஆடிக் கொண்டே, அந்த இனிய இசையில் மூழ்கி போய் விட்டார்.
காயி கிராமம், சீனாவில் மிகவும் புகழ்பெற்ற இசைக் கருவிகள் தயாரிக்கும் கிராமமாகும். அது, சீனாவின் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டுக் கலைக் கிராமமாகவும், சின்ச்சியாங்கில் உள்ளூர் தனிச்சிறப்பு வாய்ந்த நாட்டுப்புற இசைக் கருவிகள் தயாரிப்பு இடங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.