இந்த நடனத்தை ஆடும் போது, மக்கள் டிராகன் மற்றும் பீனிக்ஸ் உருவங்களை அச்சடிக்கும் கொடிகளைத் தோளில் சுமந்து கொண்டு, விளக்குகளையும், தீப்பங்களையும் ஏற்றி, மாட்டு கொம்பு, சோனா ஆகிய இசைக் கருவிகளை இசைத்து, பட்டாசுகளைக் கொளுத்தி, அரிசி மது உள்ளிட்ட பலிப் படையல் பொருட்களைக் கொண்டு, நடன மண்டபத்துக்குச் சென்றனர். முதலில் மக்கள் நடன மண்டபத்தில் பலியிடும் சடங்கு நடத்தினர். அதற்கு பின், அவர்கள் மண்டபத்திற்கு வெளியே சென்று, வண்ணமயமான சிறு விளக்குகள் தொங்க விடப்பட்ட மரத்தின் அடியில் வட்டம் வட்டமாக சூழ்ந்து நின்று, மேளதாள ஒலியுடன் நடனம் ஆடத் துவங்கினர்.
பெருமுரசு, மணி முரசு ஆகிய இசைக் கருவிகளின் ஒலியுடன், மக்கள் கை அசைவுகளின் நடனத்தை ஆடுகின்றனர். ஒருவர் அல்லது இருவர், பெரு முரசையும் மணி முரசையும் இசைத்து, நடனம் ஆடுவோர் அனைவருக்கும் ஆடுவதற்கு வழிகாட்டுகின்றனர்.