1957ஆம் ஆண்டு, ஏன் ச்சு தன்னாட்சிச் சோவிலும், ஹூபெய் மாநிலத்திலும் கலைநிகழ்ச்சி அரங்கேற்றம் அடுத்தடுத்து நடைபெற்றது. பெங் ச்சு ச்சியு உள்ளிட்ட 7 பேர் அவ்வரங்கேற்றத்தில் கலந்து கொண்டனர். லெய் ஃபெங் மாவட்டத்தின் தொடர்புடைய வாரியத்தின் தலைவர்களின் கவனத்தை கை அசைவுகள் கொண்ட நடனம் பெரிதும் ஈர்த்தது. அதற்கு பிறகு, கை அசைவுகள் டிஸ்கோ நடனம் பற்றி, லெய் ஃபெங்கிற்கு வெளியேயுள்ள மக்கள் அறிய வந்தனர். அதிகமான சிறப்புத் தொழில் கலைஞர்கள், லெய் ஃபிங் மாவட்டத்துக்குச் சென்று இந்நடனம் பற்றிய அறியும் பயணம் மேற்கொண்டனர். கை அசைவுகள் நடனம் கையேற்றப்பட்டுள்ள போக்கில், இந்நடனத்தில் சில பிரமுகர்களும் தோன்றினர். தற்போது ஷெமி ஏரி கிராமத்தில் எட்டு வயதான குழந்தை உள்ளிட்ட கிராமவாசிகள் அனைவருக்கும் கை அசைவுகளின் டிஸ்கோ நடனம் ஆட தெரியும்.
கை அசைவுகள் நடனத்தின் வளர்ச்சிப் போக்கில், நாட்டுப்புறக் கலை, வூ சு, பல்சுவைக் கேளிக்கைகள் ஆகியவை இந்நடனத்தில் படிப்படியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அதற்கு பிறகு, து ஜியா இனத்தவர்கள் குழுமி வாழும் பிரதேசத்தில், கை அசைவுகள் நடன அரங்கேற்றம், பொது மக்கள் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சியாகவும், து ஜியா இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த நாட்டுப்புற விழாவாகவும் மாறியுள்ளது.