சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 5ஆம் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் நாடுகள் அரசுத் தலைவர்களின் அலுவல் தொடர்பற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரேசில் அரசுத் தலைவர் தில்மா ரோசெஃப் அம்மையார், ரஷிய அரசுத் தலைவர் புத்தின், இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன் சிங், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ஜேக்கப் ஸூமா ஆகியோருடன், பிரிக்ஸ் நாடுகளிடை ஒத்துழைப்பு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் முதலியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, நிலைப்பாடுகளில் ஒத்த கருத்துக்கு வர முயற்சி செய்தார்.
தொடர்புடைய வளர்ந்த நாடுகள், தளர்ச்சியான நாணயக் கொள்கையிலிருந்து விலகும் போது, வெளிப்புறத்தில் அவை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை முழுமையாகக் கருத்தில் கொள்ள வேண்டுமென பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.