சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 5ஆம் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் நாடுகள் அரசுத் தலைவர்களின் அலுவல் தொடர்பற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரேசில் அரசுத் தலைவர் தில்மா ரோசெஃப் அம்மையார், ரஷிய அரசுத் தலைவர் புத்தின், இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன் சிங், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ஜேக்கப் ஸூமா ஆகியோருடன், பிரிக்ஸ் நாடுகளிடை ஒத்துழைப்பு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் முதலியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, நிலைப்பாடுகளில் ஒத்த கருத்துக்கு வர முயற்சி செய்தார்.
பல்வகை இடர்ப்பாடுகள், அறைகூவல்களை எதிர்நோக்கி, பிரிக்ஸ் நாடுகள், முக்கிய பிரச்சினைகளில் உடன்பாட்டை எட்டி, ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டுமென்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.