20 நாடுகள் குழுவின் 8வது உச்சி மாநாடு 6ஆம் நாள் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தொடர்ந்து நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு, வர்த்தகம் முதலியவை பற்றி உரை நிகழ்த்தினார்.
தற்போது, வர்த்தக பாதுகாப்புவாதம் தெள்ளதெளிவாக அதிகரித்துள்ளது. தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை தேக்க நிலையில் சிக்கிக்கொண்டுள்ளது. பலதரப்பு வர்த்தக முறைமை பல அறைகூவல்களை எதிர்நோக்குகின்றது. இவை உலகப் பொருளாதார மீட்சிக்குச் சாதகமற்றது, பல்வேறு நாடுகளின் நலன்களுக்கும் பொருந்தியதாக இல்லை என்று ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
முதலில், வர்த்தக பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, திறந்த தன்மையுடைய உலகப் பொருளாதாரத்தைப் பேணிகாத்து, வளர்க்க வேண்டும். இரண்டு, பலதரப்பு வர்த்தக முறையை வலுப்படுத்தி, தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை போக்கினைத் தூண்ட வேண்டும். மூன்று, உலக மதிப்பு சங்கிலியை மேம்படுத்தி, உலக ஒருமைப்பாட்டுச் சந்தையை உருவாக்க வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் வலியுறுத்தினார்.
ஒன்றுக்கொன்று நன்மை பெறுவதும், பலதரப்பட்ட சரிச்சீரான நிலையை நிலைநிறுத்துவதும் என்பது சீன வர்த்தகத்தின் நெடுநோக்கு இலக்காகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வுச்சி மாநாடு அன்று நிறைவடைந்தது. "20 நாடுகள் குழுவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உச்சி மாநாடு தலைவர்களின் அறிக்கையும்", "20 நாடுகள் குழு உச்சி மாநாட்டின் 5வது ஆண்டு நிறைவு அறிக்கையும்" வெளியிடப்பட்டன.