அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் முன்வைத்த முக்கிய குருத்துகளை மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகள் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு ஒப்புகொண்டுள்ளன. சீனத் தரப்பின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் பலவற்றை 20 நாடுகள் குழுவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உச்சி மாநாட்டின் தலைவர்கள் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளன என்று வாங் யி கூறினார்.
சீனப் பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலத்தையும் ஷி ச்சின் பிங் பல்வேறு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்து சக்திகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது என்று ஷி ச்சின் பிங் வலியுறுத்தினார்.
மாநாட்டின்போது, அங்குள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பொறுப்பாளர்களுடன் ஆக்கமுள்ள தூதாண்மை நடவடிக்கைகளை ஷி ச்சின் பிங் மேற்கொண்டார் என்றும் வாங் யி விவரித்தார்.