சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 3 முதல் 13ம் நாள் வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது பற்றி வெளியுறவு அமைச்சர் வாங்யீ பேசுகையில், இப்பயணத்தில் நிகழ்வுகள் அதிகமாகவும், குறிக்கோள்கள் தெளிவாகவும், பயன்கள் உயர்வாகவும் அமைந்திருந்தன என்று தெரிவித்தார்.
அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4 மத்திய ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலமாக, சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே உள்ள நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவுக்கு புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று வாங்யீ கூறினார்.