நீண்டக்காலமாக, ஃபூ சியான் மாநிலத்தின் பல்வேறு நிலை அரசுகளும், நிபுணர்களும், அறிஞர்களும் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெரும் கவனம் செலுத்தினர். நடைமுறை செயல்பாடுகளை மேற்கொண்டு பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மாதிரியை நவீனமாக்கினர். ஃபூ சியான் மாநிலத்தில் சீனாவின் முதலாவது தேசிய நிலைப் பண்பாட்டு உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மண்டலம் நிறுவப்பட்டதற்கு இதுவே காரணம் என்று ஃபூ சியான் மாநிலத்தின் பண்பாட்டுப் பணியகத்தின் சமூகப் பண்பாட்டுப் பிரிவுத் தலைவர் லியாங் ச்சியாங் சென் தெரிவித்தார்.