தேயிலை தயாரிப்புப் போக்கில், தேநீரை சுவைத்து பார்ப்பது, ஒரு வகை பண்பாடாகும். குறிப்பாக குவாங் ஷான் மலை அமைந்துள்ள பண்டைய குவெய் சோவில், தேநீர் அருந்துதல் பாரம்பரியப் பண்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று ஃபாங் ஹோங் ஷெங் படிப்படியாக புரிந்து கொண்டார். அதனால், அவர் Tun Xiயில் முதலாவது ஹோங் துங் தேனீர் வகம் நிறுவினார். அவர் கூறியதாவது:
"2008ஆம் ஆண்டு குவெய் சோவிலுள்ள மலைப்பிரதேசத்துக்குச் சென்றேன். மலையில் பல பழைய வீடுகள் உள்ளன. இந்த பழைய வீடுகளின் முந்தைய உரிமையாளர்களாக, வணிகர்களும், பண்பாட்டுப் பிரமுகர்களும் இருந்தனர். இவ்வீடுகளின் தோட்டங்களில் சிறிய ரக தேநீர் மேசைகள், தேநீர் அகங்கள், தேநீர் மண்டபங்கள் ஆகியவை இருக்கின்றன. அவற்றைக் கண்ட பிறகு, அவர்களின் வடிவமைப்பு சிந்தனைக்கிணங்க, ஹோங் துங் தேநீர் வகத்தை அலங்கரித்தேன்" என்றார் அவர்.