ஃபங் ஹோங் ஷென் கடந்த பல ஆண்டுகளாக சேகரித்துள்ள தொல்பொருட்கள் பல ஹோங் துங் தேநீர் வகத்தில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இப்பொருட்களில், வீட்டுச் சாமான்கள், பிரமுகர்களின் நேர்த்தியான கையெழுத்து மற்றும் ஓவியங்களைத் தவிர, பல்வகை தேயிலை குவளை இணைகளும் உள்ளன. அவரது தேயிலை விற்பனையாகும் பல்வேறு இடங்களில், "ஹோங் துங் தேநீர் வகம்" நிறுவப்பட்டுள்ளது. இவ்விடங்களில் பண்டைய குவெய் சோவின் தேநீர் அருந்தும் சூழலை வழங்க அவர் பாடுபட்டு வருகிறார். அவர் கூறியதாவது:
"ஷென்ச்சென், குவாங் சோ, ஹுய் சோ, ஷான் தோ, செங் து ஆகிய நகரங்களில் 'ஹோங் துங் தேநீர் வகம்' நிறுவப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு, ஷென்ச்சென் நகரில் முதலாவது தேநீர் வகம் திறந்து வைத்தேன். குவெய் சோ பாணிக்கிணங்க, இத்தேநீர் வகம் அலங்கரிக்கப்பட்டது. மக்கள் இத்தேநீர் வகத்தில் நுழைந்தவுடன், அவர்களது மனவுணர்வு அமைதியாக மாறும். அங்குள்ள பொருட்களைக் கண்ட பிறகு, அவர்கள் முந்தைய காலத்துக்குத் திரும்பியது போல் உணர்கின்றனர். ஏனெனில், இந்த பழைய மரத்தொண்டு கதவுகள், ஜனல்கள் ஆகியவை தொடர்பாக, பல கதைகள் பரவி வருகின்றன" என்றார் அவர்.
நேயர்களே, "தேநீர் சுவையுணர் கலைஞர் ஃபங் ஹோங் ஷெங்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.