2013ஆம் ஆண்டு, சீனப் பார்வையாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி, "அப்பா எங்கே செல்கின்றார்?" என்பதாகும். இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஐந்து குழந்தைகள் கடந்த ஆண்டு சீனப் பார்வையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஊட்டினர். இந்நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள், ஒவ்வொருவரும் அவர்களது குழந்தைப் பருவத்தை மீளாய்வு செய்துக் கொண்டனர் என்று சொல்லலாம். மி சியாவ் சுவன் என்னும் பார்வையாளர் பேசுகையில், வெள்ளிக்கிழமைதோறும் வீட்டுக்கு திரும்பி, இந்நிகழ்ச்சியைக் கண்டு இரசிப்பதாக கூறினார். 1980ஆம் ஆண்டுகளில் பிறந்தோர் தற்போது பெற்றோராகும் பருவத்தில் நுழைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியை பார்த்த பின்னர், உடனடியாக வாரிசு ஒன்றை பெற்றெடுக்க வேண்டுமென்ற எண்ணம் உதித்துள்ளது. பெற்றோராக, குழந்தையை செவ்வனே பராமரிக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.