பு திங் மாவட்டத்தின் பய் யன் வட்டத்தின் யீ கே ஷூ கிராமத்தில் வாழும் சோ குவோ ஃபாவுக்கு வயது 70. அங்கே விரைவில் நடைபெறயிருக்கும் ஹுவா தெங் அரங்கேற்றத்துக்கு அவர் பயிற்சி செய்து வருகிறார். அவர் பு திங் மாவட்ட நாட்டுப்புறக் கலைக்குழுவின் உறுப்பினர் ஆவார். அவரும், அவரது மனைவியும் பத்து வயது தாண்டியது முதல் ஹுவா தெங் நடனம் ஆடத் தொடங்கினர். இது வரை சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, முதியவரான அவர், அரங்கேற்றத்தில் ஹுவா தெங் நடனம் ஆட முடியாது என்ற போதிலும், இக்கலைக் குழுவில் முரசு இசைக்கும் கலைஞராக, அவரது மகன் மற்றும் மருமகளுடன் இணைந்து, ஒன்றாக நிகழ்ச்சிகளை அவர் அரங்கேற்றி வருகிறார்.