கடந்த 4 ஆண்டுகளின் முயற்சியுடன், இக்கலைக் குழு, நாட்டுப்புற கலைக்குழுவிலிருந்து, உள்ளூர் பிரதேத்தில் புகழ் பெற்ற தொழில் முறை கலைக் குழுவாக வளர்ந்து வந்துள்ளது. தற்போது இக்குழுவில், கிராமவாசிகளும், சிறப்பு கலைத் துறையினரும், ஆசிரியர்களும் ஆக 28 பேர் இருக்கின்றனர். ஹுவா தெங், உள்ளூர் இசை நாடகம், சிறுகதை, நாட்டுப்புற ஆடல் பாடல் உள்ளிட்ட கலை வடிவங்கள் மூலம், இக்கலைக்குழு அரங்கேற்றத்தில் பய் யன் வட்டத்தின் நாட்டுப்புறக் கலையை முழுமையாக வெளிப்படுத்துகிறது. இக்கலைக் குழு, பல கலைப் போட்டிகளில் விருது பெற்றுள்ளது.
இக்கலைக் குழுவின் செல்வாக்கு உயர்ந்து வருவதுடன், உள்ளூர் கிராமவாசிகள் பலர், ஹுவா தெங் அரங்கேற்றத்தில் ஈடுபடுவதை, தங்களது தொழிலாகக் கொண்டுள்ளனர்.
இதுவரை, இக்கலைக்குழு பண்பாட்டுப் பயனையும், பொருளாதாரப் பயனையும் இணைத்துள்ளது. ஓர் அரங்கேற்றத்தின் வருமானம், 2008ஆம் ஆண்டில் இருந்த ஆயிரத்து 200 யுவானிலிருந்து தற்போதைய 6 ஆயிரம் யுவான் வரை அதிகரித்துள்ளது. சில சமயங்களில், அரங்கேற்ற வருமானம், 13 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது.