• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் துவக்கம்
  2014-03-05 09:35:16  cri எழுத்தின் அளவு:  A A A   
12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைவர்கள் ஷிச்சிங்பின், லீக்கெச்சியாங் உள்பட சுமார் 3000 பிரதிநிதிகளும் அதில் கலந்து கொண்டனர். மார்ச் முதல் நாள் குன்மிங் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலின் உயிரிழந்தோருக்கு இரங்கலையும், காயமுற்றோருக்கு ஆறுதலையும் முதலில் அனைவரும் தெரிவித்தனர்.

எட்டரை நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் அறிக்கையையும், உச்ச மக்கள் நீதிமன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் அறிக்கையையும் பிரதிநிதிகள் கேட்டறிந்து பரிசீலிப்பர். வரைவுத் திட்ட அறிக்கை, வரவுச் செலவுத் திட்ட அறிக்கை முதலியவற்றையும் அவர்கள் பரிசீலித்து ஏற்றுக்கொள்வர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040