சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் மார்ச் 5ஆம் நாள் 12வது சீன தேசிய மக்கள் பேரவையின் 2வது ஆண்டு கூட்டத்தொடரில் அரசு பணியறிக்கை வழங்கினார். கடந்த ஆண்டு, சீனா, சமூகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பும், சோஷலிச நவீனமயமான கட்டுமானமும் மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன என்று லீ கெச்சியாங் கூறினார்.
பொருளாதார நிலை, நிதானமாக மேம்பட்டு வருகிறது.
சீன மக்களின் வருமானமும் பொருளாதாரத்தின் பயனும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
பொருளாதாரக் கட்டுக்கோப்புச் சரிப்படுதல், ஆக்கப்பூர்வ பயன்களைப் பெற்றுள்ளது.
கல்வி, அறிவியல், பண்பாடு, சுகாதாரம் முதலிய இலட்சியம் விறுவிறுப்புடன் வளர்ந்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.