12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது ஆண்டு கூட்டத் தொடர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. பல வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் அது பற்றி கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்கும் போக்கில், சந்தைப் பொருளாதார அமைப்புமுறை பாதுகாப்பாகவும் சீராகவும் இயங்குவதற்கு சீனா முன்னுரிமையுடன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ராய்ட்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
கடந்த பல ஆண்டுகளாக, சீனாவின் 10 விழுக்காடளவிலான பொருளாதார வளர்ச்சி வேகத்தை முழு உலகமும் சார்ந்திருந்தது. ஆனால், அதைப் போன்ற நிலைமை இப்போது இல்லை என்று சீன அரசும் நிதி ஆய்வாளர்களும் தற்போது தெரிவித்ததாக வால் ஸ்ட்சீட் இதழின் சீன மொழி இணையம் கூறியது.