12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசவையின் சார்பில் அரசு பணியறிக்கையை வழங்கினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், வோல்ஸ்ட்ரீட் நாளேடு, பிரிட்டன் ஒலிப்பரப்பு நிறுவனம், பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஆகியவற்றை உள்பட சர்வதேச முக்கிய செய்தி ஊடகங்கள், இப்பணியறிக்கையில் கவனம் செலுத்தி, அதன் உள்ளடக்கத்தை ஆய்வு செய்துள்ளன.
இப்பணியறிக்கை மூலம், சீன அரசு சீனப் பொருளாதார வளர்ச்சி, சமநிலை மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது ஆகியவற்றில் மனவுறுதி தந்துள்ளது. அத்துடன், உற்பத்தி அளவு குறைந்த துறைகளில் முதலீட்டைக் குறைந்து, மாசுபடுத்தலைக் கட்டுப்படுத்தும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மார்ச் 5ஆம் நாள் தெரிவித்தது.