சீனாவின் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் ஷாங்காய் பிரதிநிதக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டு அறிந்து உரை நிகழ்த்தினார்.
ஷாங்காய் தாராள வர்த்தக முன்னோட்ட மண்டலம் பற்றி பேசுகையில், இது, சீனாவின் தேசிய செயற்திட்டம். பன்னாட்டுச் செயல்பாட்டு விதிமுறைகளைக் கடைபிடித்து, பரவலாக கூடிய புதிய அமைப்புமுறையை விரைவில் கண்டறிய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
சமூக நிர்வாகத்தை மேம்படுத்தி புத்தாக்குவதைப் பற்றி பேசுகையில், இத்துறையில் அமைப்புமுறையின் புத்தாக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மனித வளம் அதன் மையமாக அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.