அதிகமானோரை நடுத்தர வகுப்பினராக உயர்வடையச் செய்வது, அரசின் வீண் செலவுகளைக் குறைப்பது மற்றும் ஊழலை ஒடுக்குவதற்கான மனவுறுதி சீன அரசின் பணியறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாள் அறிவித்தது.
2014ஆம் ஆண்டு சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம் 7.5விழுக்காட்டை எட்ட வேண்டுமென இப்பணியறிக்கை மூலம் தெரிய வருகிறது. உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பைக் கவனிப்பதோடு, பொருளாதாரத்தின் தொடரவல்ல சமநிலை வளர்ச்சியையும் சீன அரசு உற்று கவனம் செலுத்துவதை இது வெளிக்காட்டுகிறது என்று ஃபஸ்ட் போஸ்ட் என்னும் இந்தியச் செய்தி ஊடகம் தெரிவித்தது.