வறுமை ஒழிப்புப் பணியை மத்திய அரசு உறுதியாக நடைமுறைப்படுத்தும். கொள்கை, கடன் வழங்குதல், தொழில் நுட்ப வழிகாட்டுதல் முதலிய துறைகளில் திபெத் மேலதிகமான ஆதரவையும் உதவியையும் பெறலாம். அதன் விளைவாக, மேலதிகமான மக்கள் வறுமையை நிலையிலிருந்து, செல்வமடையலாம் என்று தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும் திபெத் இனத்தவருமான யிஷிசொஜா நம்பிக்கை தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டின் இறுதி வரை, திபெத்தில் வறுமையால் அல்லல்படுகின்ற மக்கள் எண்ணிக்கை, 2012ஆம் ஆண்டின் 5 இலட்சத்து 80 ஆயிரத்திலிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.