உரிமைப் பிரதேசம் மற்றும் தேசிய இறையாண்மை பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது. சீனாவைச் சேராதது எதற்கும் உரிமை கோர மாட்டோம். சீனாவைச் சேர்ந்தது எல்லாவற்றையும் பாதுகாப்போம். சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி மார்ச் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.
சீனாவுக்கும், சில நாடுகளுக்கும் இடையில் உரிமைப் பிரதேசம் மற்றும் கடல் குறித்த சர்ச்சை நிலவுகிறது. வரலாற்று உண்மை மற்றும் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில், சமமதிப்பிலான கலந்தாய்வு மூலம், அமைதியாக உரிய முறையில் சீனா சர்ச்சைகளைக் கையாளும். எதிர்காலத்தில் இந்த கோட்பாடு மாறாது என்று அவர் கூறினார்.