நாடளவில் 8 மணி நேரம் உயர்வேக இருப்புப்பாதை வலையமைப்பைக் கட்டியமைக்க சீனா பாடுபட்டு வருகிறது. அதாவது, உருமுச்சி மற்றும் லாசா நீங்கலாக, உயர்வேக இருப்பாதை வழியில் சீனாவின் எந்த மாநிலத்தின் தலைநகரில் இருந்தும் வேறு மாநிலத்தின் தலைநகரையும் 8 மணி நேரத்துக்குள் சென்றடையலாம்.
சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும், சீன இருப்புப்பாதை சுரங்கவழி நிறுவனத்தின் துணை தலைமை பொறியாளருமான வாங் மெங்சூ 6ஆம் நாள் செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது இதைத் தெரிவித்தார்.