இவ்வாண்டின் இரு பெரும் கூட்டத்தொடர்களில், சீனாவின் தூதாண்மை கொள்கை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது சீனாவின் தூதாண்மை, செயல்நோக்கு வாய்ப்புகளும், முரண்பாடுகளும் நிறைந்த காலத்தில் நுழைந்துள்ளது.
சீனாவின் புதிய தலைவர்கள் பதவி ஏற்று ஓராண்டு ஆகிவிட்டது. வல்லரசு தூதாண்மை, அண்டை நாட்டுத் தூதாண்மை, பல்தரப்பு தூதாண்மை, வளரும் நாடுகளுடனான தூதாண்மை ஆகியத் துறைகளில், சீனா அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனத் தலைவர்கள் வெளிநாடுகளில் அதிகமாக பயணம் மேற்கொண்டனர். 20 நாடுகள் குழு, ஏபெக், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் உள்ளிட்ட பலதரப்பு உச்சி மாநாடுகளில் சீனா ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, சிரிய வேதி ஆயுதப் பிரச்சினை உள்ளிட்ட உலக மையப் பிரச்சினைகளின் தீர்வுப்போக்கில் பங்கெடுத்துள்ளது. புதிய ரக சீன-அமெரிக்க வல்லரசு உறவ உருவாக்கம், சீன-ரஷிய உறவு வரலாற்றில் மிக நல்ல காலக்கட்டத்தில் நுழைவது, அண்டை நாடுகள் மற்றும் பிரிக்ஸ் நாடுகளுடன் நிதானமான உறவை முன்னேற்றுவது ஆகியவை, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கு சிறந்த வெளிப்புற சூழலை உருவாக்கியுள்ளது.
சீனாவின் புதிய தலைவர்கள், சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கம் என்ற எழுச்சியுடன், புதிய தூதாண்மை சிந்தனை மற்றும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். தவிர, உரிமைப் பிரதேசம், அரசுரிமை மற்றும் பாதுகாப்பைப் பேணிகாப்பதில் சீனத் தூதாண்மை முழு சுயநம்பி்க்கையை வெளிகாட்டியுள்ளது.
2014ஆம் ஆண்டு, தூதாண்மைத்துறையில் மன திறந்த, பொறுப்பான புகழை சீனா மேலும் வெளிப்படுத்தும்.