சட்ட அடிப்படையில் சீர்திருத்த முன்னேற்றம்
2014-03-10 10:37:10 cri எழுத்தின் அளவு: A A A
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் ச்சாங் தேஜியாங், மார்ச் 9ஆம் முற்பகல் 12வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடரில் பணியறிக்கை வழங்கினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 18வது தேசிய மாநாட்டில், சீன தனிச்சிறப்புடைய சோஷியலிச சட்ட அமைப்பு முறையை முழுமையாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி, சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்கும் பொது இலக்கின் கீழ், சட்டமியற்றும் கொள்கை முடிவை சீர்திருத்தக் கொள்கை முடிவுடன் செவ்வனே இணைத்து, சீர்திருத்தம் தொடர்பான சட்ட விதிகளை விரைவாக வகுக்கவும் திருத்தவும் வேண்டும். சட்ட அடிப்படையில் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னேற்றி நடைமுறைப்படுத்தி, சீர்திருத்தத்துக்கு வழிகாட்டி உத்தரவாதம் அளிக்கும் துறையில் சட்டமியற்றலின் முக்கிய பங்கினை முழுமையாக ஆற்ற வேண்டும் என்று ச்சாங் தேஜியாங் தனது பணியறிக்கையில் குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய