• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தலைமை அமைச்சர்: மாசுபாடு மிகுந்த புகைமூட்டம் தடுப்புக்கு செயல்பாடுகள்
  2014-03-13 12:59:41  cri எழுத்தின் அளவு:  A A A   
புகைமூட்டம் உள்பட மாசுப்பாடுகள், பொது மக்கள் பெருமளவில் கவனம் செலுத்தும் பிரச்சினையாக இருக்கின்றன. இம்மாசுப்பாட்டை தடுக்க கண்டிப்பான விதிகளை செயல்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், சீனச் சீர்திருத்தங்களை பன்முகங்களிலும் ஆழமாக்கும் போக்கில் முக்கிய துறைகளில் முன்னேற்றமடைவதை துவக்கமாக கொள்ள வேண்டும். சந்தையின் பங்களிப்பை முழுமையாக வெளிகொணர்ந்து, சமூகத்தின் புத்தாக்க திறனை ஆக்கமுடன் வெளிப்படுத்துவது, அரசு வாரியங்கள் பொறுப்பேற்று மக்களுக்கு நன்மை தருவது ஆகியவை சீர்திருத்தத்தின் அடிப்படை கண்ணோட்டமாக அமையும் என்று லீ கெச்சியாங் சீர்திருத்தம் பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040