போ ஆவ் ஆசிய மன்ற ஆண்டு கூட்டம் 8ஆம் நாள் ஹெய்நான் மாநிலத்தின் போஆவ் நகரில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் லீ கே ச்சியாங் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட சீன மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். சீனா மற்றும் பல்வேறு முக்கிய ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் தணிவடைந்து வருகின்ற நிலைமையில், பொருளாதார ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் எவ்வாறு வலுப்படுத்துவது இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
பட்டுப்பாதைப் பொருளாதாரப் பாதை, 21வது நூற்றாண்டில் கடல் வழி பட்டுப் பாதை ஆகிய சீனா முன்வைத்த கருத்துக்கள், ஆசிய பொருளாதார ஒத்துழைப்பில் மிகப்புதிய அம்சமாக மாறுவது உறுதி என்று போ ஆவ் ஆசிய மன்றத்தின் தலைமைச் செயலாளர் சோ வென்சுங் தெரிவித்தார்.