உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை 17ஆம் நாள் ஜெனீவாவில் நான்கு தரப்புப் பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளன. அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலமாக உக்ரைன் நெருக்கடியை தீர்க்க அவை முயற்சிகள் எடுக்கின்றன.
ஜெனீவா பேச்சுவார்த்தையே, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான நேரடியான அரசியல் வழிமுறையாக இருக்குமென, அமெரிக்காவும் ஐரோப்பாவும் முன்னதாக விருப்பம் தெரிவித்தன.