புள்ளிவிபரங்களின்படி, இது வரை ச்சுவான் சோவிலுள்ள 120க்கு அதிகமான இடைநிலைப் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகளில் நான் யீன் இசைப் பாடம் வழங்கப்படுகின்றது. ச்சுவான் சோவிலுள்ள 2 இலட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் நான் யீன் இசைக் கற்றுக்கொண்டுள்ளனர். 400க்கு அதிகமான நான் யீன் இசைக்குழுக்களும், 70க்கு மேலான நான் யீன் இசை வகுப்புக்களும் தொடர்புடைய வாரியத்தில் பதிவுச் செய்துள்ளன. நான் யீன் இசை அரங்கேற்றுவோரின் எண்ணிக்கை, 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ச்சுவான் சோவைச் சேர்ந்த தொழில்முனைவோர் 3 கோடி யுவானை நன்கொடையாக வழங்கியதுடன், இவ்வாண்டு பிப்ரவரி திங்கள், "நான் யீன் மற்றும் நான் ச்சி வளர்ச்சி நிதியம்" நிறுவப்பட்டது. நான் ச்சி என்பது, இசை நாடக வகைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தலைசிறந்த நான் யீன் இசை மற்றும் நான் ச்சி அரங்கேற்றுபவருக்கும், தொடர்புடையத் துறைப் பிரமுகர்களுக்கும் ஊக்கத் தொகையை வழங்குவதும், நான் யீன் மற்றும் நான் ச்சியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதும், இந்நிதியம் நிறுவப்பட்டதன் நோக்கமாகும்.