கடலில் மூழ்கிய செவோல் எனும் கப்பலுக்கான மீட்புதவிப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இக்கப்பலிலிருந்து எந்த சமிக்கையும் தேடுதல் பணியாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 19ஆம் நாள் 10 மணிக்கு வரை, அவ்விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். 4 சீன மக்கள் உள்பட 270க்கு மேற்பட்டோர் காணாமல் போயினர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவின் கடல் காவல் பணியகம் 19ஆம் நாள் இதைத் தெரிவித்தது.